தற்போது தமிழில் கதைப்பது என்றாலே அது மரியாதை குறைவாகவே பலர் நினைத்து வருகின்றனர். இன்றைய பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.
அழகு தமிழில் கதைப்பதற்கு எதற்காக தயக்கப்படவேண்டும், வெட்கப்பட வேண்டும். அகிலம் எங்கெங்கும் தமிழர் இனங்கள் கொடி பறக்கும் என்று அருமையாக பாடியுள்ளார் தென்னிந்திய திரைப்படப்பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் நிஷாந்தன் அவர்கள்….
மனிதர் மனதில் மாறாத அன்பில் தேனை ஊற்றாக்கும் தமிழை கதைப்பதற்கு இனி வெட்கப்படாதீர்கள்…. இனியாவது தமிழில் கதைத்து தமிழர்கள் என்று பெருமை கொள்வோமா?….