அனிருத் தற்போது வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் பீப் சாங் சர்ச்சையில் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
அனிருத் மற்றும் சிம்பு இருவரும் ஜனவரி 2ம் தேதி நேரில ஆஜராக வேண்டும் என்று முன்பே போலிஸார் கூறினர்.
இந்நிலையில் அனிருத் தரப்பில், இன்னும் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். மேலும், அனிருத் இந்த பாடலை பாடவில்லை என சிம்புவே கூறிவிட்டார்.
இதனால் சிம்பு கூறியதை சுட்டிக்காட்டி அனிருத்தின் வழக்கறிஞர் அவகாசம் கேட்டுள்ளார். அவகாசம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.