கடந்த 2014 இல் லண்டனில் மட்டும் இது 4 பில்லியன் அளவில் நுகரப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இதைவிட அதிகமாக இதன் நுகர்வு உள்ளது.
வருங்காலத்தில் அதற்கு தேசிய பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பிருப்பதால் அது நுகர்வோரிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவகேடாவில் நமக்கென்ன அத்தனை பிரியம்?
இது அதிக சுவையை கொண்டது மட்டுமன்றி சலட்டுகள், ரொட்டி மற்றும் சுஷி ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்படக் கூடியது. அவை மிகவும் நல்ல பயனை தரக்கூடியன.
அவை நார்த் தன்மை கூடியது. நிரம்பிய கொழுப்பமிலங்களை கொண்டது. அன்ரியொக்சிடன், விட்டமின் B6, E, கொழுப்புக்கள் அத்துடன் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளதிலும் இரு மடங்கான கல்சியத்தையும் கொண்டுள்ளது.
இது முன்னைய காலங்களில் யானை, குதிரை, மமத் போன்ற விலங்குகளால் உண்ணப்பட்டது.
ஆய்வுகளின் படி கிட்டத்தட்ட 13,000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு அரைக்கோளத்தில் இவ்வினத்தின் பெரும்பகுதி இல்லாமல் போயுள்ளது. வட மெரிக்காவில் 68 வீதம் வரையிலும், தென்னமெரிக்காவில் 80 வீதமானவையும் காணமல் போயுள்ளது.
இது பரம்பலடைவதற்கும், இனம்பெருகுவதற்கும் போதுமான பொறிமுறை இல்லாதமையே இவ்வினம் அழிவடைந்து வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.