அவசரஊர்தியில் சென்ற இந்திய வீரர்கள்

306
பேருந்தை தவறவிட்டதால் இந்திய வீரர்கள் அவசரஊர்தியின் மூலம் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நான்கு நாட்களும் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது, இதனால் இந்தியா- தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டலுக்கு சொகுசு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால், பேருந்து கிளம்புவது தெரியாமல் தவான், ராகுல், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் மைதானத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் பேருந்து வந்து தங்களை ஏற்றிச்செல்லவேண்டும் என்பதை எதிர்பார்க்காத வீரர்கள் மைதானத்திற்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அவசரஊர்தியில் ஏறி தங்கள் ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.

SHARE