அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட குறித்த இலங்கையரை புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.
நீர் கொழும்பைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் இன்று நீர் கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நாடு கடத்தப்பட்டவரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.