ஆசிரியர்களால் தாக்கப்பட்ட உயர்தர மாணவன் தொடர்பில் முறைப்பாடு..!!

191

22031

காலியில் பிரபல பாடசாலையில் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் காலி பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையின் பிரதி அதிபர்கள் இருவரும்,ஒழுக்காற்று ஆசிரியருமே குறித்த மாணவனை தாக்கியுள்ளதாக காலி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காயமடைந்த மாணவன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் ஆசிரியர்களின் தலையீட்டை தொடர்ந்து இரண்டு நாட்களின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஒழுக்காற்று ஆசிரியர் வைத்தியசாலையில் வைத்து தாக்கப்பட்ட மாணவனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளான்.

எனினும் நேற்று மீண்டும் குறித்த மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE