யாழ் உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.