ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன்

655

 

ஆனந்தசங்கரிஐயா அலட்டுவதையிட்டோ கடிதம் எழுதுவதையிட்டோ மக்கள் கணக்கெடுப்பதில்லை ஆனந்தசங்கரியார்? என்பது மக்களுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

Tamil-MPs-happy-party-2013-7

சில்லிக்கொடியாறு மக்கள் சந்திப்பு 19ம் திகதி ஆலயமுன்றலில் இடம்பெற்றபோது தொடர்ந்து உரையாற்றிய அரியம் வடமாகாணமக்களால் நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரிஐயா மட்டக்களப்பு மக்களை ஏமாற்றலாம் என பழய பல்லவிகளைபாடுகிறார் இவரின் கடந்த கால அரசியல் காட்டிக்கொடுப்புகள் எல்லாம்  அனைவருக்கும் நன்கு விளங்கும்.தந்தை செல்வாவையும் தமிழர்விடுதலை கூட்டணியையும் பற்றி கதைக்கும் இவர்
ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் எப்போதுமே தந்தைசெல்வா தமிழர்விடுதலைகூட்டணியை தனக்குள்ளே மட்டும் வைத்து பதவி  ஆசை பிடித்து  அலையவும் இல்லை கட்சியின் சின்னத்தை மடியில்
கட்டிக்கொண்டு உரிமை கோரவுமில்லை அவர் தனிநபர் அரசியல் செய்யவில்லை ஆனந்தசங்கரி ஐயா தமிழ் முஷ்லிம்தேசிய கூட்டமைப்பை உருவாக்கிவிட்டு ஆள்தேடும் படலத்தில் இறங்கியுள்ளார் அதில் ஒரு கட்டமாக வந்துதான் மட்டக்களப்பு  மக்களை ஏமாற்றலாம் என கனவுகாண்கிறார் அவரின் சொந்த
மாவட்ட மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த சங்கரியார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றிக்கதைக்க எந்த
அருகதையும் இவருக்கோ  இவருடன் ஒட்டி இருக்கும் பச்சோந்திகளுக்கோ இல்லையெனவும் அரியம் மேலும் கூறினார்.

SHARE