ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கு! ஜனாதிபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிக்கை

335

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அமுதவர்த்தனி கொலை வழக்கில் கணவனான யேசுராசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், குற்றவியல் சட்ட நடவடி கோவையின் 286 ஆம் பிரிவின் கீழ், நீதிபதியினால் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததன் பின்னர்,

அந்தத் தண்டனைய நிறைவேற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என தீர்ப்பளித்த நீதிபதி தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதிக்கு அறிக்கையிட வேண்டும் என்ற சட்ட சரத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை நீதிபதியினால் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக, பின்வரும் காரணங்களின் அடிப்படையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்றும், அதனை ஆயுள் தண்டனையாக அல்லது ஜனாதிபதி கருதும் குறைந்தபட்ச தண்டனையாகக் குறைக்குமாறும் நீபதிதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதிக்கான நீதிபதியின் இந்த அறிக்கை கொலைக்குற்றவாளியான மரண தண்டனைக் கைதியாகிய இராசமணி யேசுராசாவுக்கு நீதிபதியினால் திறந்த நீதிமன்றத்தில் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டது.

ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் யுத்த குற்றவாளிகளுக்குக் கூட, மரண தண்டனை விதிப்பதற்கு சட்டம் பரிந்துரைக்கவில்லை.

ஐநா யுத்த குற்றவாளி நீதிமன்றமாகிய யுகோஸ்லேவாக்கியா யுத்த குற்றவாளிகள் நீதிமன்றத்திலும் மற்றும் ருவாண்டா ஐக்கிய நாடுகள் யத்த குற்றவாளிகள் நீதிமன்றத்திலும், யுத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சட்டம் பரிந்துரைக்கவில்லை.

மனித உரிமைகள் வளர்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் உலகத்தின் 160க்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழிப்பதற்கே நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில் இந்த வழக்கின் கைதிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என அந்த அறிக்கையில் நீதிபதி தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டின் பின்னர், கடந்த 40 ஆண்டுகளாக மரண தண்டனை தீர்ப்புக்கள் நீதிமனற்றங்களினால் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும். மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளஞ்செழியன்,

40 ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் இந்த வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என தனது அபிப்பிராயத்தை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிரியினால் அவருடைய மனைவி சொலை செய்யப்பட்டுள்ளார். கணவனான எதிரிக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றினல் அவருடை குடும்ப மனநிலை பாதிக்கப்படும். அதன் அடிப்படையில் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதி அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்ட நடவடி கோவையின் 286 சி பிரிவின் படி நீதிபதியின் அறிக்கையை ஜனாதிபதி பெற்றுக்கொண்டு, அதனை பரிசீலனை செய்ததன் பின்னர். ஜனாதிபதி தனது தீர்மானத்தை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அறிக்கை இடவேண்டும் என்று சட்டம் பரிந்துரை செய்கின்றது.

அதனையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளஞ்செழியன், கொலைக்குற்றச்சாட்டில், குற்றவாளியாகக் காணப்படும் நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது நீதிபதியின் சட்டரீதியான கடமையாகும்.

அதனை நீதிபதி மீற முடியாது. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என மரண தண்டனை சட்ட ஏற்பாடுகள் அமைந்துள்ளன. ஆயினும் கொலைக்குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக வழங்கப்படுகின்ற சட்ட ரீதியான மரண தண்டனையை குறைப்பதற்கு ஜனாதிபதிக்கு சட்டம் அனுமதி வழங்கியிருக்கின்றது.

எனவே, இந்தத் தீர்ப்பி;ல் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை வழங்க வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன். ஜனாதிபதிக்கென தாயாரிக்கப்பட்ட நீதிபதியின் இந்த அறிக்கையை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

SHARE