ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் மற்றும் குடும்பஸ்தர் ஒருவரும் கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.
அதன்போது, படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் படகில் இருந்த பிள்ளைகள் பயத்தில் கத்தியுள்ளனர்.
மது போதையில் குடும்பஸ்தர்
அதனை கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்ததுடன், அவ்விடத்திற்கு விரைந்து, படகில் இருந்து பிள்ளைகளை மீட்டு, கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர், இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்த்துள்ளனர்.
இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்தமையும் தெரியவந்துள்ளது