முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கன்னங்களும் முக்கிய இடம் வகிக்கின்றது.
பெண்களுக்கு கன்னங்கள் குண்டா இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும். இந்த கவலையை உடனே போக்க எளிய வழிமுறைகயை மேற்கொண்டாலே போதும்.
அவை என்ன என்பதை பார்ப்போம்.
- தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண்டும். ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.
- மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.
- ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு அல்லது ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.
- தினமும் உணவில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் செழுமையான கன்னங்களை பெறலாம்.
- தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண!ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.
- நல்லெண்ணெய் அல்லது தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் குண்ணாகி விடும்.
- ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை அப்பி, தினமும் செய்து வர ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.
- ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.