தனுஷ் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம், எப்படி ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்.
தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளீர்கள் எப்படி? என்று கேட்க, ‘எனது வேலையை நான் காதலிக்கிறேன், கொண்டாடுகிறேன். அதனால் நான் சோர்வடைதில்லை’ என கூறியுள்ளார்.
மேலும், தன் அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால் தான் இயக்குனராக முடிவெடுத்தேன் என்றும் கூறினார்.