ஆயரின் மருத்தவ சிகிச்சைகளுக்கு நிதி சேகரிப்பை மேற்கொள்ளும் மனித மான்பினைக்காக்கும் அமைப்பு

341

 

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த இரண்டு

வாரங்களாக சிங்கப்பூரில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை

மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அவரின் மருத்துவச்

செலவுகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக தேவைப்படுவதாக ஆயரின்

செலவுகளை மேற்கொள்ளும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆயரின் மருத்தவ சிகிச்சைகளுக்கு நிதி சேகரிப்பை

மேற்கொள்ளும் வவுனியா மாவட்ட மனித மான்பினைக்காக்கும் அமைப்பின்

தலைவர் திருமதி என். கிசோகுமார் வெளியிட்ட

அறிக்கையில்……………

ஆயர் அவர்கள் சுகயீனம் அடைந்ததும் இலங்கை வாழ் மக்களும் சரி புலம்

பெயர்ந்த தமிழ் உறவுகளும் சரி மிகவும் ஆதங்கத்துடன் அவரைப்பற்றி

விசாரித்து வந்துள்ளமை நீங்கள் அறிவீர்கள். ஆயர் மேல் அவர்கள்

எவ்வளவு நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ளார்கள் என்பதை எமக்கு

உணர்த்தியது. அதேபோன்று இன்று உங்கள் எல்லோருக்கும் ஆயர்

அவர்களுக்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எனவே எமது அமைப்புடன் இணைந்து ஆயர் அவர்கள் வெளிநாட்டில் தங்கி

சிகிச்சைபெற்றுவரும் செலவுகளுக்காக வங்கி கணக்கு ஒன்றை

ஆரம்பித்துள்ளோம். சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், நலன்

விரும்பிகள் அனைவரும் எம்முடன் இணைந்து நிதி சேகரிப்பினை

மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பினை வழங்கி ஆயர் அவர்கள் பூரண

சுகத்துடன் நாடு திரும்ப இறைவனைப்பிராத்திக்கின்றோhம். கணக்கு இல,

8610072157 கொமர்சல் வங்கி, வவுனியா. அமைப்பின் தலைவர்

தொலைபேசி இல. 0777629181

SHARE