திருகோணமலை கடற்பரப்பில் உள்ள மீன்கள் உயிரிழந்த நிலையில் கடற்கரைப்பகுதியில் ஒதுங்கியுள்ளதாக மீன்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயிரக் கணக்கான மீன்கள் இவ்வாறு உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம் இது வரையில் கண்டறிப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில், மீன்வள திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.