இங்கிலாந்து- பிரான்ஸ் கால்பந்தாட்ட போட்டி: பாதுகாப்பு வளையத்தில் விம்ப்லே மைதானம்

284
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி விம்ப்லே மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று இரவு நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கால்பந்தாட்ட மைதனத்தின் மூன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பலத்த அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கால்பந்தாட்ட அணிகள் மோதும் நட்பு ரீதியான போட்டி விம்ப்லே மைதானத்தில் இன்று இரவு தொடங்கவுள்ளது.

இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய பொலிசார் மைதானத்தை சுற்றி பாதுகாப்பில் ஈடுபடுத்தவுள்ளனர்.

சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் இளவரசர் வில்லியம்ஸ் கலந்துகொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் வரை 14 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகாமல் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE