அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடி மின்னல்களின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் தற்காத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து பல மாகாணங்களில் அதிகரித்த மழைவீழ்ச்சி பெய்துவருவதாகவும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மலையகத்தில் இன்று காலை முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது.
அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.
பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஹற்றன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக வாகனத்தில் (ஹெட்லைட்) முன் விளக்கு போட்டுக்கொண்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சீரற்ற காலனிலையின் காரணமாக, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிலச்சரிவு எச்சரிக்கையானது இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு இப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.