லிந்துலை – இராணிவத்தை பகுதியில் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி விழுந்து மரம் முறிந்து விழுந்ததில் ஆறு பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஆறு தொழிலாளிகளும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது இடி விழுந்து மரம் முறிந்து விழுந்ததிலே குறித்த ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.