இதில் தவறு செய்துவிட்டோம்: ரோஹித் ஷர்மா ஒப்புதல்

84

ஹாங்காங் அணிக்கு எதிராக பந்துவீசிவதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண தொடரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி போராடி ஹாங்காங்கை வென்றது. இந்தியா நிர்ணயித்த 286 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங், 8 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனால் ஹாங்காங் வெற்றியை நெருங்கியது. எனினும் கடைசி கட்டத்தில் ஓட்டங்களை கட்டுப்படுத்தியதால் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘ஹாங்காங்கிற்கு எதிரான போட்டி எளிதாக இருக்காது என்பதை அறிந்து இருந்தோம்.

இறுதியில் வெற்றி பெற்றது முக்கியமானது. நாங்கள் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினோம். ஆனால் அதை காரணம் காட்டக் கூடாது. பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம்.

இன்னும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் வெற்றியை நோக்கி முன்னேறினர். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி கட்டத்தில் நெருக்கடி சூழ்நிலையை கையாண்ட விதம் சிறப்பானது. அடுத்தடுத்து போட்டிகளில் மோதுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் தான் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

SHARE