இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன

301

CE620HIWMAA_85P

இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது.

இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான எங்கள் போராட்டத்தை அதற்கான காரணத்தை கவனத்தில் எடுக்காது குழிதோண்டி புதைத்துள்ளது என்பதுதான் உண்மை. இதற்காக விலைபோனவர் தான் கருணா அம்மான் என அழைக்கப்பட்ட முரளீதரன். இவரின் வழிகாட்டல்களும் இவ்வளவு விரைவாக தமிழனின் போராட்டம் நசுக்கப்பட முக்கிய காரணம்.

karuna-with-army

போராடிய புலிகளுடன் வீரத்தை காட்டியது வேறு, மட்டுமல்லாமல் ஏதுமற்ற நிராயுத பாணிகளான மக்களிடமும் வீரம் காட்டிய வல்லூருகள் இன்று இலங்கை ஆட்சிப்பீடத்தின் முக்கிய பதவிகளில் சிறப்பாக உள்ளனர்.

war-crime-with-name

போரில் சரணடந்தவர்களை கொன்று குவித்து, பெண்களை தாம் கைது செய்தவர்கள் முன்னிலையில் கற்பழித்து கொன்றதோடு அதனை தமது தொலைபேசிகளிலும் படம் பிடித்து ரசித்த கொடூரர்கள். இவர்களிடம் எவ்வாறு நீதியையோ அல்லது சகோதரத்தையோ எதிர்பார்க்க முடியும்?

9aab3-tamilsslaughteredandraped

முள்ளிவாய்க்கால் வரையான போரில் ராணுவத்தின் 5 படையணிகள் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் கொமாண்டர்களாக சவேந்திர சில்வா, கமால் குணவர்த்தன, ஜெகத் டயஸ், பிரசன்ன டி சில்வா மற்றும் நந்தன உடவத்த ஆகியோர் சரணடந்த மக்களை என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்று அனுமதி வேறு வழங்கி இருந்தனர். ஜகத் டயஸ் ஒரு படி மேலே போய் ` அவர்கள் அரசாங்க சொத்துக்கள்` என்று அடிமை சாசனம் பாடி உள்ளார். இவர்கள் தான் முதல் குற்றவாளிகள்.

army-crime

1987 மற்றும் 1977 மற்றும் முதல் காலங்களில் தென்னிலைங்கையில் இடம்பெற்ற ஜே.வி.பி யின் கலவரத்தில் கடுமையாக நடந்து கொண்ட மற்றும் கற்பழிப்புகள் மேற்கொண்ட இரானுவத்தினரை காலம் சென்றாலும், அவர்கள் சிலரை ஓய்வு பெற்றபின்னரும் வீடுகளுக்குச் சென்று போட்டுத்தள்ளியது ஜனதா விமுக்த்தி பெரமுன என்னும் ஜே.வி.பி. அப்படியாயின் மானத்தமிழர் என்ன செய்ய போகிறார்கள்?

Tamils

இறந்த தமிழ் மக்களுக்கு கூட நினைவு செய்யமுடியாது இருக்கிறது தமிழனின் பூர்வீக பிரதேசத்தில். வேற்று கிரகத்தில் யாரேகினும் இருப்பார்கலேயானால் அவர்கள் பண்டைய மொழியாகிய தமிழ் மொழி அல்லது சீன மொழி பேசும் வாய்ப்பிருக்கிறது என விஞ்ஞானம் கூற ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் தமிழனின் நிலையோ அந்தோ பரிதாபம்.

isaipriya-1

 

முதலில் தமிழர் ஒற்றுமை மிக அவசியம். ஆளுக்கொரு முண்ணனியும் அமைப்புக்களையும் உருவாக்குவதையோ அல்லது ஏற்படுத்துவதையோ விடுத்து ஒரு அமைப்பாக இருந்து உன்மையான தமிழர் உரிமை நோக்கர்களை ஒருங்கிணைத்தால் என்ன? இதனை புலம் பெயர்ந்தவர்கள் செய்து காட்டலாமே? ஏன் பிரித்தானியாவிலேயே சாத்தியமாக்கலாமே??
தமிழனுக்கு ஒரு அரசு இல்லாததாலே நாடுகடந்த அரசு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டு இப்போது ஒருப்குறிப்பிட்டவர்களுக்கான சொந்த அமைப்பாகி விட்டது.

1383462966

ஆனால் வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் வைக்கப்பட்டு ஒரு மாகாண அரசு உருவாகி தமிழர் ஆட்சி(?) இடம்பெற்று வருகின்றது. இதனைக்கூட யாழ்ப்பாணத்து பத்திரிகை ~ மலர்ந்தது தமிழீழ அரசு` என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போட்டு மக்களுக்கு பீலா விட்டது. பாவம் மக்களும் நம்பிட்டினம். இப்ப நாடு கடந்த அரசு வேணுமா என்றது கூட யதார்த்தமாக யோசித்தால் ஒரு கேள்விக்குறிதான்.
ஆண்டவா…………. எங்களுக்கு விடிவு வருமா? அல்லது இரவாகவே இருக்குமா? சுய நலமில்லாதவர்கள் தமிழினத்தலைவராக எப்ப வரப்போகின்றார்களோ??? அவனுக்குத்தான் வெளிச்சம்

SHARE