இதுவே உணர்வுடன் நடைபெறுகிறது. ஈழமண்ணின் மாவீரர் நாள்
பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம்
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.புலிகளின் போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், மாவீரர் நாளான கார்த்திகை 27 விதையாகியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்னமோ அச்சுருத்தல் மிக்க நிகழ்வாகவே எதிர்நோக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவிதமான அச்சுருத்தல்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி பல்லாயிரம் கணக்கில் பொதுமக்கள் கிளிநொச்சியில் ஒன்று திரண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டித்தது இதுவே முதல் தடவையாகும் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.