இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடர்: கடினமாக உள்ளது எனக்கூறும் டுமினி

262

 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானது என்று தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரர் டுமினி கூறியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடர் வருகிற 25 ஆம் திகதி நாக்பூரில் தொடங்கவிருக்கிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா 108 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது, 2 வது டெஸ்ட் தொடர் மழையால் டிரா ஆனது.

மழை குறுக்கிடாவிட்டால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும், இந்நிலையில் 3 வது டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரர் டுமினி கூறியதாவது, நாக்பூர் ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்றும் எங்களுக்கு இது சரியான நேரம், ஆனால் இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

SHARE