இந்தியாவுக்கு எனது ருத்ரதாண்டவத்தை காட்டுவேன்: கிறிஸ் கெய்ல் சவால்

231
இந்தியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அதிரடியில் கலக்க தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் கூறுகையில், “இந்திய அணியில் பல மேட்ச் வின்னர்கள் உள்ளனர். இங்கு அவர்களை தோற்கடிப்பது கடினமான காரியம்.

எங்களது இலக்கு விராட் கோஹ்லி மட்டும் இல்லை. குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால், எந்த ஒரு வீரராலும் அதிரடியில் கலக்க முடியும்.

இந்த தருணத்தில் விராட் கோஹ்லி தான் கவனிக்கத்தக்க வீரராக இருக்கிறார். எங்களுக்கு எதிராக அவரை ஓட்டங்கள் குவிக்க விடாமல் தடுப்போம்.

மேலும், எனக்கு எதிராக அஸ்வினையோ அல்லது வேறு யாரை வேண்டுமானானும் பயன்படுத்தலாம். அணித்தலைவர் டோனி என்ன செய்வார் என்பதை கணிக்க முடியாது.

அதேசமயம் கெய்லால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட நான் தயாராக உள்ளேன்.

யார் பந்து வீசினாலும் நான் அவர்களின் பந்துகளை விளாசித்தள்ள முயற்சிப்பேன்.

கெய்ல் ஓட்டங்கள் எடுக்க குவிக்க தவறினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SHARE