இந்திய அமைதிப் படையால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுகூரல்

317
இந்திய  அமைதிகாக்கும் படையினால் கடந்த 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் காலை போதனா வைத்தியசாலையில் நினைவுகூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 9 மணிக்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலமையில் நினைவு நாள் நடைபெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட 21பணியாளர்களினதும் உறவினர்கள் கலந்து கொண்டு கண்ணீர்மல்க ஈகை சுடர்களை ஏற்றினர்.

SHARE