இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 மீனவ குடும்பங்கள் புதுச்சேரியில் நேற்று உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது காரைக்கால் மேட்டைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர் புதுச்சேரி தலைமை அஞ்சலகத்திற்கு முன்பாக எரியூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
தமது உறவினர்களான 10 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
காரைக்காலைச் சேர்ந்த 8 மீனவர்களும், நாகபட்டினத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் மீனவ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வீரராஜன் என்ற படகு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.