இந்தோனேஷிய வெள்ளப் பெருக்கில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

221

இந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 50 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் காயமடைந்துள்ளதுடன் வீடுகளும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது மழை குறைவடைந்துள்ளதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

SHARE