இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !

20

 

இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !
மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இனவாதத்துக்கு இடமளிக்கும் எந்த முயற்சியையும் அரசாங்கம் பொறுக்காது என்றும், சட்டத் திருத்தங்கள் தேவையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு இனவாதத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மலையக மக்கள் இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுபவர்கள் என தெரிவித்த ஜனாதிபதி, “200 வருடங்களாக இங்கு வாழும் மக்களை எங்கிருந்து வந்தவர்கள் எனத் தேடுவதில் அர்த்தமில்லை” என்றார். சமநீதி மற்றும் இணக்கம் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவதே இன்றைய அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும், இனங்களுக்கிடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாத ஒரு நிலையை உருவாக்குவதே அவசர தேவையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
SHARE