இனி மேல் சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் – ஐ.சி.சி

131

ஐ.சி.சி சார்பில் இனி மேல் நடத்தப்படும் உலக கிண்ண உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத் தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் தற்போது டி20 வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப் படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி.லீக் நடத்தப்படுகிறது.

சவுதி அரேபியாவிலும் டி20 கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டி20 லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஆடும் அணியில் இடம் பெறும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

SHARE