இனி 30 நாட்களுக்கு… ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் அறிவித்தது

278
இனி 30 நாட்களுக்கு... ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் அறிவித்தது

ஏர்டெல்
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை வழங்கி வந்தன. பின் திடீரென வேலிடிட்டி நாட்கள் 28-ஆக குறைக்கப்பட்டன.
இதனால் ஒருமாத வேலிடிட்டி என்பது 28 நாட்களாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் காலண்டர் மாத வேலிடிட்டி என 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை கடந்த வாரம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தற்போது ஏர்டெல்லும் இரண்டு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் படி ரூ.296-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்எம்எஸ்கள், 25ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
மற்றொரு திட்டத்தில் ரூ.319க்கு ரீசார்ஜ் செய்தால் தினம் 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டங்களுடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் எடிஷன், ஃபாஸ்ட்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE