இந்தக் கலந்துரையாடலின்போது பல வருடங்களாக மீள்குடியமர்த்தப்பட்டும் இருப்பதற்கு இருப்பிடம் கூட இன்னும் வழங்கப்படவில்லை எனவும், தாம் போருக்கு முன்னர் விவசாயம் செய்து வந்த காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் களவாடப்பட்டுள்ளன எனவும், தமது விவசாய நிலங்களைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் சம்பந்தன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சம்பந்தன் எம்.பி., கூடிய விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் எனவும், புதிய அரசு இப்படியான மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்குமாறும், நல்ல எதிர்காலம் மைத்திரி அரசில் உருவாகும் சாத்தியம் உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, சாந்திபுரம் துர்க்கையம்மன் கோயிலுக்கு ஐந்து இலட்சம் ரூபாவும், நொச்சிக்குளம் பிள்ளையார் கோயிலுக்கு ஐந்து இலட்சம் ரூபாவும் நிர்மாணப்பணிகளுக்காக வழங்குவதாகவும் கூடிய விரைவில் கும்பாபிஷேகம் செய்யுமாறும் கோயில் நிர்வாகத்தினரிடம் சம்பந்தன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
|