பீப் பாடலை பாடிய சிம்பு மற்றும், இசையமைத்ததாக கூறப்படும் அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேரில் ஆஜராகும்படி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது.
பின்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரிய சிம்புவிற்கு, இந்த வழக்குகள் ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளில் தான் உள்ளது என கூறி, அவர் ஜாமீன் பெற்றுகொள்ளலாம் என அறிவித்தனர். மேலும் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
சிம்பு இன்று போலீசிடம் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார்.
‘என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, ஜனவரி 11–ந் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகவேண்டும் என்று உத்தரவை மாற்றியமைக்கவேண்டும். போலீஸ் முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’.
இந்த புதிய வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸ் நிலையம் முன்பு வருகிற 29–ந்தேதிக்குள் சிம்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.