
தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வது சவாலான விஷயம். ஒரு நடிகரின் நடிப்பு பிடித்து இருந்தால் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை வியக்க வைக்கும்படி நடிக்க வேண்டும். இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாகவும் ஆசையாகவும் உள்ளது.

இலியானா கவர்ச்சியான நடிகை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல் தடவையாக முபாரகான் படத்தில் காமெடியில் நடித்ததும் உங்களை இப்படி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்று சொன்னார்கள். அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.