ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று முதல் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே (PSD) இதுவரை குறித்த பாதுகாப்பு சேவையை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.