இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணையவேண்டும்

140
இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் ஆகியவற்றை நிராகரிக்கும் சட்ட விதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து இன மக்களிடையே நம்பிக்கையை உறுதி செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக மற்றும் கருத்தியல் ரீதியாக நிலவும் வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும் எனவும்,ஒரு நாடு என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியிருக்கும் தருணத்தில் இவ்வாறான பேதங்களை கடந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார். – ada derana

SHARE