ஆசிரிய உதவியாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக ஆசிரிய உதவியாளர்கள் மத்தியில் கடந்த மாதம் கல்வி அமைச்சினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி நாட்டிலுள்ள குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள் தமக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக் கிடைக்கவுள்ளதாக எதிர்பார்த்திருந்தார்கள். இருந்த போதும் இந்த மாதச் சம்பளத்துடன் மேற்படி சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாம் இந்த முறையும் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளார்கள்.
மிகமிகக் குறைந்த சம்பளம் பெறும் ஆசிரிய உதவியாளர்கள், சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் கல்வி அமைச்சினால் 10,000 ரூபா ஆசிரிய உதவியாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பு எனக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும் மலையகத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு, அரசாங்கம் வெறும் 6000 ரூபா மட்டுமே சம்பளமாக வழங்குவது மனிதாபிமானமற்ற செயல் என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.