இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கு 13 பேர் விண்ணப்பம்

310
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கான விளம்பரத்தை பார்த்து விட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நீதி அமைச்சின் அனுமதிக்கமைய ஒரு மாதத்திற்கு முன்னர் இவ் வெற்றிடத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டதாக உதவி பொலிஸ் ஆணையாளர் அருணா அத்தபத்து தெரிவித்துள்ளார்.

வெற்றிடங்களுக்கு இரண்டு பேர் தெரிவு செய்வதற்கான பயற்சிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பயற்சியை நிறைவு செய்த இரண்டு கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE