ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர். ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 19,000 ரூபாவும் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 23 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.