இரத்தினபுரியில் தினமும் இரண்டு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்!– பாலித பெர்னான்டோ

266

இரத்தினபுரியில் நாள் ஒன்றுக்கு இரண்டு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவங்களேனும் பதிவாகின்றது என மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டச் செயலக காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும கூறுகையில்…

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அதிகமானவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்களாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

சில நாட்களில் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஒன்று முதல் மூன்று வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளின் லயன் அறைகளில் பெண் பிள்ளைகளை தனியாக வைத்துச் செல்வதனால் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

பத்து மற்றும் அதற்கும் குறைந்த வயதுடைய பெண் பிள்ளைகள் 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகின்றன.

வார இறுதி நாட்களில் மருந்தகங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை வாங்கிச் செல்லும் தனியார் வகுப்பு மாணவிகளை அதிகளவில் அவதானிக்க முடியும்.

இரத்தினபுரி அம்பிலிபிட்டி நகரங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு நகரங்களின் சில விடுதிகளில் தவறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Tamil-Daily-News-Paper_65209162236

SHARE