இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

395

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட கஹவத்தை-லெல்லோபிட்ட பிரதேச வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு  தீ விபத்து சம்பவம் இ்டம்பெற்றுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட கடைத் தொகுதி ஒன்றிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் கடை முற்றாக தேசமடைந்துள்ளதுடன், கடையில் இருந்த பொருட்களுடன், குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் வண்டிகள் இரண்டும் முற்றாக சேதமடைந்திருப்பதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

c3baaa4a-3388-4c6b-a6bb-b54d7b16afb5_S_secvpf

SHARE