இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம்
இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை – கல்கிசை தீயனைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் குறித்த மத்திய நிலையத்தில் வாகனம் சுத்தப்படுத்துவதற்காக பயன்படும் இரசாயன திரவம் களஞ்சியப்படுத்தும் இடத்திற்கு குறித்த தீ பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதென தெஹிவளை – கல்கிசை தீயனைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை – கல்கிசை தீயனைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் குறித்த மத்திய நிலையத்தில் வாகனம் சுத்தப்படுத்துவதற்காக பயன்படும் இரசாயன திரவம் களஞ்சியப்படுத்தும் இடத்திற்கு குறித்த தீ பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதென தெஹிவளை – கல்கிசை தீயனைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.