இரா­ணு­வத்­துக்­குத் தேவை­யான அதி­கா­ரங்­களை வழங்­கி­னால், வடக்­கில் செயற்­ப­டும் குழுக்­களை அடக்கி விட முடி­யும்-இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க

158

 

ஶ்ரீலங்கா இரா­ணு­வத் தள­பதி கோரி­யுள்ள மேல­திக அதி­கா­ரத்தை வழங்க அரசு தயா­ராக இருப்­ப­தாக இரா­ஜாங்க அமைச்­சர் அஜித் பீ.பெரேரா தெரி­வித்­துள்­ளார்.

‘குறிப்­பிட்­ட­ள­வான ஒரு காலத்­துக்கு மாத்­தி­ரம், இரா­ணு­வத்­துக்­குத் தேவை­யான அதி­கா­ரங்­களை வழங்­கி­னால், வடக்­கில் செயற்­ப­டும் குழுக்­களை அடக்கி விட முடி­யும். இரா­ணு­வம் தனது கட­மை­களை செய்­யும். இரா­ணு­வத்­துக்கு மேல­திக அதி­கா­ரங்­களை வழங்­கு­வது பற்றி அர­சு­தான் முடிவு செய்ய வேண்­டும்’ என்று இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க கண்­டி­யில் வைத்து நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் கொழும்­பில் நேற்­றுக் கருத்­துத் தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்­சர், நாட்­டின் அனைத்து பகு­தி­க­ளி­லும் சரி­யான முறை­யில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் தீர்­மா­னங்­களை எடுக்­க­வும் பொலி­ஸா­ருக்­கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் அதி­கா­ரம் இருக்க வேண்­டும். அதற்­குத் தேவை­யான கூடிய அதி­கா­ரங்­களை கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் – என்­றார்.

இதே­வேளை, யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில், ஆவா குழு போன்ற வன்­மு­றைக் குழுக்­களை அடங்­கு­வ­தற்கு அரச தலை­வ­ரின் அனு­ம­திக்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும், அந்த அனு­மதி கிடைத்­தால், 48 மணி நேரத்­துக்­குள் அந்­தக் குழுக்­களை அடக்­கி­விட முடி­யும் என்­றும் யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வத் தள­பதி கடந்த 20ஆம் திகதி தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

SHARE