
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வௌிநாட்டு பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக இவர் மீது சட்டத்தரணிகள் குழுவொன்றினால் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.