இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?
இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..
கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் இடத்தில் பல முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப் பட்டு சித்திர வதை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பழைய அரசை விட புதிய அரசு பாரிய சவால்களை எதிர் கொள்ள வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது