இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

180

maith

இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதன் பொறுப்பு தனக்கு அதிகம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பனாங்கொட இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதுடன், அவர்கள் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த வீரர்கள் என்று நிரூபிப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவத்தினரினருக்கான தண்டனைகள் தொடர்பில் பல அரசியல் மேடைகளில் பல வகையில் பேசப்படுவதாகவும், தான் அதனை எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கத்தை விட தாய் நாட்டுக்காக அனைவரும் சேவையாற்ற வேண்டுமாறு தான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE