
இறால் – 250 கிராம்,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 25 கிராம்,
நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 1/2 கட்டு,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – 100 மி.லி.,
பச்சைமிளகாய் – 5,
சோம்பு தூள் – 2 டீஸ்பூன்,

செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான இறால் சுக்கா ரெடி.