
இறால் – 100 கிராம்
முட்டை – 2
வெங்காயம் – 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிது,
உப்பு – 1/2 ஸ்பூன்,
வெங்காயத்தாள் – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.