இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டை மற்றும் அழிந்து வரும் பவளப்பாறை வகைகளை கடத்த முயற்சித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களை இந்தியா இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வசமிருந்த கடலட்டைகள் 200 கிலோ கிராம் எடையுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போதே சந்தேகநபர்களிடம் இருந்த உலர் கடலட்டை மற்றும் பவள பாறைகளை பறிமுதல் செய்ததுடன் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடத்த முயற்சித்த இந்த கடலட்டை மற்றும் பவளப்பாறைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
அத்துடன் இவைகளுக்கு தென் கிழக்காசிய நாடுகளில் அதிக கேள்வியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.