இலங்கைக்கு கடலுக்கு அடியில் இருந்து மின் விநியோகம்

204

puzhal_2

கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்குநடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE