இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றுவேன்.

385

 

இவ்வருடப் பிற்பகுதியில் இலங்கை வருவேன் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு எதிர்காலத்தில் எவ்வகையான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளீர்கள்? இங்கு வருகைதரும் எண்ணம் உள்ளதா?

tamil_280

ஆகிய கேள்விகளுக்குப் பதிலளித்த சொல்ஹெய்ம், “நான் இவ்வருடப் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றுவேன். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாக உள்ளன. இலங்கையில் (நிரந்தர) சமாதானம் நிலைநாட்டப்படுமிடத்து மிகத்துரிதமாக நாடு அபிவிருத்தியடையமுடியும்”

SHARE