அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த நான்கு பேர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறையினர் இந்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இலங்கை அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோயம்பத்தூரின் கொத்தூர் பிரதேச அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கையர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கன்யாகுமாரியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல 70,000 ரூபா பணத்தை சந்தேக நபர்கள் கோரியுள்ளனர்.