இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

336

 

இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

cvd

ஏற்கனவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை இந்தியாவின் யோசனை என்றும் இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் இருந்து எதிர்க்கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வெளியிட்ட கருத்து அமெரிக்காவின் கொள்கையை உணர்த்தும் வகையில் உள்ளதாக கருதப்படுகிறது.

இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க உயர் இராஜதந்திரி சமந்தா பவர், காணாமல் போனோர் விடயத்தில் காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ்களுக்கு பதிலாக காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.

எனினும் அதனை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாததை போல் இருந்தது.

எனினும் நேற்று அந்த அமெரிக்கக் கொள்கையை ஏற்று காணாமல் போனோர் சான்றிதழை வழங்கப்போவதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்தை முன்வைத்திருக்கிறது. அதாவது நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த காணாமல் போனோர் தொடர்பில் கண்டறிந்து மரண சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று யோசனையை எதிர்த்ததன் மூலம் குழுக்களின் பிரதிதலைவர் செல்வம் அடைக்கலநாதன் காணாமல் போனோர் சான்றிதழை ஏற்கும் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது

SHARE